தஞ்சாவூர், மே. 22 –

தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…

இந்தியாவின் முன்னாள் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் 33 வது நினைவு நாளான இன்று பயங்கரவாதத்தை எதிர்க்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் காங்கிரசார் அமைதி பேரணி நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதன் பேரில் தமிழகம் முழுவதும் இன்று காங்கிரசார் அமைதி பேரணி நடத்தினர்.

தஞ்சாவூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா சாலை வழியாக கீழவாசல் காமராஜர் சிலை வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் காமராஜர்  சிலைக்கும், ராஜீவ் காந்தி திரு உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் பயங்கரவாத  எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.ஜி. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் முன்னாள் மாவட்டத் தலைவர் நாஞ்சி கி. வரதராஜன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினர்கள் ஏ. ஜேம்ஸ், வயலூர் எஸ். ராமநாதன், ஜான்சன், மாநகர மாவட்டத் துணைத் தலைவர் ஜி. லட்சுமி நாராயணன், பொருளாளர் ஆர். பழனியப்பன், சேவா தளத் தலைவர் திருஞானம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு குமாரசாமி, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சாந்தா ராமதாஸ், டி.எஸ்.ஆர். சங்கரசூரியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here