காஞ்சிபுரம், ஜூலை. 20 –
இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் 2022 ஆம் ஆண்டிற்கான சதுரங்க போட்டி நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் சி.எஸ்.எம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இச் சதுரங்க போட்டியில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ் பங்கேற்று போட்டியை துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெருமந்தூர், குன்றத்தூர் என ஐந்து ஒன்றியங்களிலும் இப்போட்டி நடைபெறுகின்றது காஞ்சிபுரம் ஒன்றியத்தில் மட்டும் 50 பள்ளியை சேர்ந்த 300 மாணவர்கள் பங்கேற்றனர்.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்ளுக்கு மட்டுமே இந்த சதுரங்க போட்டி நடத்தப்படுகின்றது. அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், மெட்ரிக் பள்ளிகளிலும் சதுரங்க போட்டி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
காஞ்சிபுரம் வட்டார அளவிலான அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். மாணவர்களை சதுரங்க போட்டியில் ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சதுரங்க போட்டி நடத்தப்டும் என தெரிவித்தனர்.
சதுரங்க போட்டியில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மேயர் மகாலட்சுமி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.