செங்கல்பட்டு, ஜூலை. 02 –

செங்கல்பட்டு மாவட்டம் ஓ.எம்.ஆர் சிறுசேரி சிப்காட் அருகே உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் 35- வயதான ஜெனிபர் என்பவர் தாயுடன் வசித்து வந்துள்ளார்.

நேற்று தான் வசித்து வந்த சுமார் 33 அடுக்குமாடிகள் கொண்ட குடியிருப்பின் 24 வது மாடியிலிருந்து ஜெனிபர் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற கேளம்பாக்கம் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் ஜெனிபர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து ஜெனிபர் தாயிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஜெனிபர்க்கு 35வயது ஆகியும் திருமணம் ஆகாமல் இருந்ததும் அதனால் அவருக்கு மனவுலைச்சலில் அவதிப்பட்டு வந்த தாகவும், அதனால் தினந்தோறும் இரவு ஜெனிபர் உறக்கம் இல்லாமல் தவித்து வந்ததால் தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தாழம்பூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஜெனிபரை திடீரென வேலையை விட்டு நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மேலும் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டு கடந்த மூன்று நாட்களாக அதிக சிரமத்தில் இருந்த ஜெனிபர் எதிர்பாராத நேரத்தில் 24வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக அவர் தாயார் மூலம் தகவல்கள் தெரியவந்தது. மேலும், இச்சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here