ஆவடி அருகே சாலையின் குறுக்கே உள்ள தடுப்பு சுவரில் கார் மோதி ஐடி ஊழியர் படுகாயம் அவருடன் பயணம் செய்த இருவருக்கு சிறிய காயங்களுடன் தப்பினர்.

 ஆவடி; அக்.13-

ஆவடி அடுத்த வசந்த் நகரை சேர்ந்த ஐ.டி. ஊழியர் ஸ்ரீதர் இன்று மாலை அயனாவரத்தில் இருந்து தனது கார் மூலம் ஆவடியில் உள்ள தனது வீட்டிற்கு நண்பர்கள் இருவருடன் வந்துக் கொண்டிருந்தார். திருமுல்லைவாயில் அடுத்த காவல்துறை பயிற்சி மைதானம் அருகே கார் கட்டுப் பாட்டை இழந்து குறுக்கே இருந்த சுவரில் மோதி காரின் முற்பகுதி அப்பளம் போல் நொறுங்கி பாகங்கள் சாலைகளில் சிதறியது.

 

காரை ஓட்டி வந்த ஸ்ரீதருக்கு தலை மற்றும் முதுகுப் பகுதிகளில் பலத்தகாயங்களுடன் இரத்த வெள்ளத்தில் மிதந்தார். அவரை அவருடன் பயணம் செய்த நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையின் ஒரம் அமரச் செய்தனர். தகவல் அறிந்து விபத்து நடந்த பகுதிக்கு வந்த பூந்தமல்லி போக்குவரத்து காவலர் அவசர ஊர்திக்கு அழைப்பு விடுத்து விபத்தில் அடிபட்டவரை உடனடியாக அவசர ஊர்தி 108 ல் ஏற்றி ஆவடி அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.  மேலும் விபத்துக் குறித்து வழக்கு பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து போக்குவரத்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தினால் அம்பத்தூரில் இருந்து ஆவடி செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here