பூவிருந்தவல்லி, மே. 12 –

முன்னாள் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பூவிருந்தவல்லி நகர அதிமுக சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பா பெஞ்சமின் மருத்துவ முகாமை பார்வையிட்டு உடல் பரிசோதனை செய்து கொண்டார்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிச்சாமி பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் பகுதியாக சென்னை பூந்தமல்லியில் அதிமுக நகர செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் முன்னாள் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இதில் திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான பெஞ்சமின் கலந்துகொண்டு மருத்துவ முகாமை நேரில் பார்வையிட்டு உடல் பரிசோதனை செய்துகொண்டார். முகாமில் கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, உள்ளிட்டவை இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

இதனையடுத்து சுமார் 100க்கும் மேற்பட்ட பூந்தமல்லி நகர அதிமுக தொண்டர்கள் எடப்பாடியார் பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தானம் செய்தனர். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிமாறன், மாவட்ட பொருளாளர் ஜாவித் அகமத், உள்ளிட்ட அதிமுக கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here