திருவாரூர். பிப். 23 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ..

திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகர் பகுதியில் உள்ள வாசன் நகரில் ஸ்கந்தசாய் திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மனோன்மணி அம்பிகை சமேத ஶ்ரீ ஜோதி ஸ்வர்ண லிங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வெகுச்சிறப்பாக நேற்று நடைப்பெற்றது.

மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆறு கால பூஜைகள் நடைபெற்று ஆறாம் கால யாக பூஜையின் நிறைவு  பூர்ணாஹூதி  யுடன் மஹாதீபாரதணை நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளத்துடன் சிவவாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள்  புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்து வானத்தில்  கருடபகவான் வட்டமிட விமான கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது இந்த விழாவில் வேளாகுறிச்சி ஆதினம் சபரிமலை நம்பூதிரிகள்  உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாத பைகள் வழங்கப்பட்டது இவ்விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்கந்தசாய் தியான பீட ட்ரெஸ்ட் வெகுச் சிறப்பாக செய்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here