பொன்னேரி, செப். 15 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் விழா அப்பகுதியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு திராவிட இயக்க கொள்கைகளைக் கொண்ட கட்சிகளின் நிர்வாகிகள் பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ளஅறிஞர் அண்ணா வின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். திமுக சார்பில் மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் செயலாளர் சுகுமாரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவருடன் பொன்னேரி நகர அவை தலைவர் செங்கல்வராயன்,நகர பொருளாளர் ராமலிங்கம்,மாவட்ட பிரதிநிதிவாசுதேவன்,பொன்னேரி நகர வாரி செயலாளர் முருகானந்தம்,மார்டின்,நகரக் கழக துணைச் செயலாளர் நீலகண்டன்பொன்னேரி நகர முன்னாள் இளைஞர் அணி செயலாளர் டாக்டர் மா.தீபன்,பொன்னேரி இளைஞர் அணி நகர செயலாளர் திவாகர்,வழக்கறிஞர் அணி கோளூர் கே. மூர்த்தி,வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிலம்பரசன்,நகர கவுன்சிலர் யாக்கோபு,மீஞ்சூர் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் பார்த்தசாரதி,ஏலியம்பேடு கிளை செயலாளர் ஜெகன்,வார்டு செயலாளர் கோட்டி,முன்னாள் கவுன்சிலர் நிர்மலா சீனிவாசன்,மீஞ்சூர் வடக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி திருப்பாலைவனம் ராஜா,பாலீஸ்வரன்,கிளைச் செயலாளர் ஹரி கிருஷ்ணன்,என்.ஜி.ஓ.நகர்.ராஜேஷ்,பனப்பாக்கம் ராஜேந்திரன்,வெல்டன் வாசகர்,கலைமாமணி,ருக்கு,ஜெயபிரகாஷ்,சந்துரு,சிவலிங்கம் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோன்று அதிமுக சார்பில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி. பலராமன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது அவருடன் பொன் ராஜா பொன்னுதுரை பானு பிரசாத் செல்வகுமார் சங்கர் நாலூர் முத்துக்குமார் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உடன் இருந்தனர்