பொன்னேரி, ஏப். 14 –

பொன்னேரியில் அமமுக சார்பில் நடைப்பெற்ற அம்பேத்கரின் 131வது பிறந்தநாள் விழாவில் பி.வி.சங்கர்ராஜா அண்ணலின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் டாக்டர்.  அம்பேத்கரின் 131-வது பிறந்த நாளை யொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அனுப்பம்பட்டு பி .வி. சங்கர்ராஜா  பொன்னேரி திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து. அங்கு கூடியிருந்தவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பொன்னேரி நகர செயலாளர் தயாளன். உள்ளிட்ட அமமுக கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here