திருவள்ளூர், மார்ச். 10 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட மணவாளன் நகரைச் சேர்ந்தவர் கிரிபிரசாத்ராவ், (44) மேலும் அவர் பெங்களூரில் உள்ள ஐ.டி.சி., இன்போடெக் எனும் தனியார் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.  அவருக்கு தனலட்சுமி (40) என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2019- ஆம் ஆண்டு அவரது பள்ளி பருவ பெண் நண்பரான காயத்ரி என்பவர் மூலம் மதுரை சோழவந்தான் பகுதியைச் சேர்ந்தவரும் சென்னை தி.நகர் ஆக்ஸிஸ் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்த  ராஜ்குமார் (38) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார்.

ராஜ்குமார் ஆக்ஸிஸ் வங்கி உட்பட பல்வேறு வங்கிகளில் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் ராஜ்குமார் கிரிபிரசாத் ராவ்விடம் பி.எம்.எஸ். என்ற நிறுவனத்தில் பணம் செலுத்தினால் மாதா மாதம் அதிக அளவிலான பங்குத்தொகை கிடைக்கும் எனவும் மேலும் எப்போது கேட்டாலும் முழுத் தொகையையும் திருப்பித் தருவதாக கூறியுள்ளார்.

அதனை நம்பிய கிரிபிரசாத்ராவ் ராஜ்குமாரின் சொற்படி பி.எம்.எஸ் நிறுவனத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.3 லட்சம், வங்கி மூலம் அனுப்பி உள்ளார்.  பின் அதே மாதம்  5-ஆம் தேதி 10 லட்சமும், தொடர்ந்து 8-ஆம் தேதி ரூ.5 லட்சமும், செப்டம்பர் 13-ஆம் தேதி ரூ.30 லட்சமும்,  2022-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ரூ.5 லட்சம், 2023-ஆம் ஆண்டு ரூ. 60.30 லட்சம் என மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முறையாக பங்குத்தொகை வழங்காமல் ராஜ்குமார் காலம் தாழ்த்தி வந்துள்ளதாகவும், அதனைத்தொடர்ந்து கடந்த 2023-ஆம் ஆண்டு திருவள்ளூர் காக்களூர் பகுதியில் உள்ள எச்.டி.எப்.சி வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்த போது கிரிபிரசாத் கொடுத்த 1.13 கோடி ரூபாய் பணத்தை கேட்டுள்ளார்.

அப்போது, கேட்ட பணத்தை உடனடியாக தருவதாக கூறி வந்த ராஜ்குமார்  திடீரென தலைமறைவாகி உள்ளார். மேலும் அதனைத்தொடர்ந்து அவரது செல்போனும் சுவீட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததாகவும், கிரிபிரசாத் ராவ் தெரிவிக்கிறார்.

அதனால் அதிர்ச்சி அடைந்த கிரிபிரசாத்ராவ் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி பவானி மீது நம்பிக்கை பண மோசடி செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர்.

அதில் கடந்த ஓராண்டாக திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு  போலீசார் நடத்திய விசாரணையில் திருவேற்காட்டில் உள்ள ராஜ்குமாரின் வீட்டிற்கு அவர் வந்ததாக தகவல் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது, அதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று ராஜ்குமாரை கைது செய்தனர்.

தொடர்ந்து அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனர்.  மேலும் வங்கி மேலாளர் ராஜ்குமார் இதுப்போன்று அதிக பங்குத்தொகை தருவதாக தெரிவித்து, பலரிடம் ரூ. 6 கோடி ரூபாய்  வரை மோசடி செய்துள்ளது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here