திருவள்ளூர், மே. 16 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட செங்காத்தகுலம், பகுதியில் சுமார் 25 ஆண்டுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் அங்குள்ள பள்ளி பயிலும் மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு திறனை வளர்க்கும் விதமாக மாற்றம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும் மற்றும் திரைப்பட நடிகருமான  ராகவா லாரன்ஸ், மற்றும் kpy பாலா ஆகியோரின் அறிவுறுத்தலின்படி

திருவள்ளூர் பகுதி சார்ந்த இந்திய டென்னிஸ் பால் கிரிக்கெட் வீரரான  ராஜ்குமார் ஆனந்தன்,  அப்பகுதிக்கு நேரில் சென்று அங்குள்ள பிள்ளைகளுக்கு கல்வி உபகரங்களான நோட்டுப் புத்தகங்கள், பென்சில், பேனா, மற்றும் விளையாட்டு உபகரங்களான பேட், ஸ்டெம்ப், பால் போன்றவற்றினை வழங்கினார்.

அதனை அடுத்து அங்குள்ள பிள்ளைகளுடன் டென்னிஸ் பால் கிரிக்கெட் வீரர் ராஜ்குமார் ஆனந்தன், கிரிக்கெட் விளையாடி பிள்ளைகளை மகிழ்வித்தனர்.நிகழ்வின் போது சமூக சேவகர் மோகன் மற்றும் அப்பகுதி கவுன்சிலர், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here