கும்பகோணம், ஜூன். 18 –
கேரளாவில் சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முதியவரை தமிழ்நாடு காவல்துறையினர் உதவியுடன் கேரளா போலீசார் கும்பகோணத்தில் கைது செய்தனர்.
கும்பகோணம் கும்பேஸ்வரர் தெற்கு வீதியை சேர்ந்த ராமநாதன் (65) என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மனவளச்சேரி கிராமத்தில் டீக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது அங்கு 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்து விட்டுஅங்கிருந்து தலைமறைவாகி விட்டார். இது தொடர்பாக சிறுமியின் குடும்பத்தார் கேரளா மாநிலம் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். அப்புகாரின் அடிப்படையில் கேரளா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று கும்பகோணத்தில் தலைமறைவாக இருந்த ராமநாதனை மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் பேபி உதவியுடன் கைது செய்து கேரளா அழைத்துச் சென்றனர்.
கேரளாவில் சிறுமி பலாத்காரம் செய்து விட்டு இரண்டு ஆண்டுகளாக கும்பகோணத்தில் பதுங்கி இருந்த முதியவரை கைது செய்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.