கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் உள்நாட்டு மீன்வளத்தைப் பெருக்கிடும் வகையில், ஆறுகளில் நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டம் சார்பில் 40, ஆயிரம் மீன் குஞ்சுகளை விடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது இந்நிகழ்வில் பங்கேற்ற அரசு தலைமை கொறடா கோவி. செழியன் மீன் குஞ்சுகளை ஆற்றில் விட்டு தொடங்கி வைத்தார்.

கும்பகோணம், ஜன. 04 –

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் பிரதான் மந்திரியின் மீன்வள மேம்பாட்டு திட்டம், தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மத்திய அரசின் தேசிய மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆறுகளில் நாட்டு இன நன்னீர் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் பகுதியாக இன்று காவிரி கொள்ளிடம் ஆற்றில் 40 ஆயிரம் நாட்டு இன மீன் குஞ்சுகள் விடப்பட்டது. குறிப்பாக அழிவின் நிலையில் உள்ள நாட்டின மீன் குஞ்சுகளான கட்லா, ரோகு, மிர்கால், சேல் கெண்டை, கல்பாசு போன்ற நாட்டின மீன் குஞ்சுகள் விடும் பணி காவிரி கொள்ளிடம் ஆற்றில் அரசு தலைமை கொறடா கோவி செழியன் தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து இந்நிகல்வில் உரைநிகழ்த்திய கோவி. செழியன் இத் திட்டத்தின் மூலம் ஆற்றில் நாட்டின் மீன் உற்பத்தி ஆண்டிற்கு 20 டன் மீன்கள் கூடுதலாக உற்பத்தியாவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவும்,

மேலும் இப்பகுதியில் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், பொது மக்களுக்கு நாட்டின மீன்கள் கிடைக்கப் பெறுவதற்கு வழி வகுப்போடு, அழிவின் விளிம்பு நிலையில் உள்ள நாட்டின மீன்களை பாதுகாப்பதற்காகவும், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என அப்போது அவர் தெரிவித்தார்.

மேலும், கல்லணையில் இருந்து காவேரி அரனாறு தலைப்பு வரை 205 கி.மீ. தூரம் வரை பாய்ந்து செல்லும் காவிரி வெண்ணாறு வெட்டாறு ஆற்றில் ஒரு கி.மீ. தூரத்திற்கு 2000 நாட்டின மீன் குஞ்சுகள் என 205 கி.மீட்டருக்கு 5 லட்சம்  நாட்டுயின மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளது என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் கலந்து கொண்டு மீனவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் மீன் உரம் வழங்கினார். இதில் நாகப்பட்டினம் மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குனர் இளம்வழுதி உதவி இயக்குனர் சிவகுமார் திருப்பனந்தாள் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் கோ.க அண்ணாதுரை ஒன்றிய செயலாளர் உதயசந்திரன் மாவட்ட பிரதிநிதி சண்முகம் ஊராட்சி மன்ற தலைவர்கள் அஞ்சம்மாள் பசுபதி மணலூர் குமார் அசோகன் அன்சாரி மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மீன்வள நலத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏரமானவர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here