காஞ்சிபுரம், டிச. 24 –

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம், ஸ்ரீபெருமந்தூர், சுங்குவார்சத்திரம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சொல்போன்கள் திருடு போனது தொடரபாக பொதுமக்கள் அந்தந்த காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் செல்போன்கள் பறிகொடுத்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காணாமல் போன செல்போன்களை சைபர் கிரைம் பிரிவு போலீசார் ஒரு மாதத்திற்க்கும் மேலாக தேடி வந்த நிலையில் இன்று 217 செல்போன்களை கண்டுபிடித்து செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

217 செல்போன்களின் மதிப்பு 28.21.000 ரூபாய் என காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காப்பாளர் சுதாகர் தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சைபர் கிரைம் பிரிவு போலீசாரை மாவட்ட எஸ்.பி சுதாகர் வெகுவாக பாராட்டினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here