காஞ்சிபுரம், ஏப். 23 –

காஞ்சிபுரம் அருகே முன்னே சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த பைக் லாரி மீது மோதி விபத்துகுள்ளானது. இதில் சம்பவம் இடத்திலியே இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த இளம் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வந்தவம்தாங்கள், வீராகோவில் தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன் (24). இவர் பஞ்சாப் மாநிலத்தில் இராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றார்.

ஒரு மாதம் விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ள நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் காட்பாடியில் இருந்து  சென்னைக்கு சென்று விட்டு மீண்டும் சென்னையில் இருந்து வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது காஞ்சிபுரம் அருகே சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை  சித்தேரிமேடு என்ற இடத்தில் இவர் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்றுகொண்டு இருந்த லாரி திடிரென பிரேக் போட்டதால் பின்னால் பைக்கில் வந்து கொண்டிருந்த தமிழரசன் லாரியின் மீது மோதினார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தமிழரசன் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து ஆற்காடு பகுதியை சார்ந்த லாரி ஓட்டுநர் சதிஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here