திருத்துறைப்பூண்டி, ஆக. 21 –

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுக்கா, விளக்குடி பகுதியில் திருத்துறைப்பூண்டி மன்னார்குடி செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான இடத்தினை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் மகேஷ் மற்றும் அவருடைய அண்ணன் சதீஷ் ஆகியோரை  கண்டித்தும், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக உள்ள இடத்தை மீண்டும் உடனடியாக மீட்டு தர வேண்டும் என்பதை வலியுறுத்தியும், விளக்குடி பகுதியைச் சேர்ந்த கிராமவாசிகள், அனைத்து கட்சி நண்பர்கள், பெண்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டவர்கள் சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றார்கள்.

இந்நிலையில் அத்தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் நீண்ட பேச்சு வார்த்தை நடத்தி மாலைக்குள் அவ்விடத்தை அரசு மீட்டுவிடும் என அவர்களிடம் தெரிவித்தனர். அதனை ஏற்க மறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள் நீங்கள் மீட்டுத் தாருங்கள் நாங்கள் காத்திருக்கிறோம் என்றவாறு தொடர்ந்து, விளக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here