மயிலாடுதுறை, ஏப். 06 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த வருசபத்து பகுதியில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. நாகப்பட்டினத்தை சேர்ந்த சுபாஷ், நவிரூபன் உள்ளிட்ட இரண்டு இளைஞர்கள் தொடுவாயில் நண்பரின் உறவினர் இறப்பிற்கு வந்து மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பியுள்ளனர்.

வருஷபத்து அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வருஷபத்து மாரியம்மன் கோயிலை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சக்திகா, தர்ஷிதா (3) இருசக்கர வாகனத்தில்  வந்துள்ளனர் அப்பொழுது இரண்டு வாகனங்களும் எதிரெதிரே மோதி விபத்து ஏற்பட்டது.

 

இதில்  4 வயது குழந்தை தர்ஷிதா, சுபாஷ் (20) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த சக்திகா, நவீருபனை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 வாகனத்தின் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு சக்திகா மேல் சிகிச்சைக்காக  சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நவிருவன் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு சக்கர வாகனங்கள் மோதி குழந்தை மற்றும் இளைஞர் உயிரிழந்த சம்பவம்  அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here