பிகில் திரைப்பட வெளியீட்டின் போது பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு விஜய் அளித்த வேண்டுகோளை ஏற்று . அதன்படி தேனி மாவட்ட நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிகில் திரைப்பட வெளியீட்டுக்கு பேனர் வைப்பது தவிர்த்து, எப்போதும் சமூக நலப் பணிகளில் அக்கறையுடன் செயல்பட்டு வரும் தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், மேலும் சமுக அக்கறையை மெருகூட்டும் வகையில் பிகில் திரைப்படத்தையொட்டி பேனர் வைப்பதை தவிர்த்து, இரு விவசாயிகளின் வங்கிக் கடனை அடைத்து அவர்களுக்கு மரியாதை செய்ய திட்டமிட்டு அதன்படி, தளபதி விஜய் ஆசியுடனும், மக்கள் இயக்க மாநில தலைவர் புஸ்ஸி ஆனந்த் வாழ்த்துகளுடனும், தேனி மாவட்டத்தில் 2 விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன் 15.11.2019 அன்று நேரடியாக வங்கிகளில் அடைக்கப்பட்டது.

அதன்படி, பள்ளப்பட்டியை சேர்ந்த விவசாயி முனியாண்டி கொடுவிலார்பட்டி கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தொகை 49,450 மற்றும் ஜெயமங்கலத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் ஜெயமங்கலம் கூட்டுறவு வங்கியில் வாங்கிய 46,000 ஆகிய கடன்கள் தளபதி மக்கள் இயக்க மாநில தலைவர் பாண்டி தலைமையில் அடைக்கப்பட்டது.

அந்த விவசாயிகள் இருவருக்கும் தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் இன்று  மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட இளைஞரணி தலைவர் பிரகாஷ் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இப் பெருமைகளை ஏற்ற இரு விவசாயிகள் மனமுவர்ந்து நெகிழ்ந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here