சோழவரம், ஜூன். 13 –

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்துள்ள அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ளது இருளிபட்டு சத்திரம் என்ற கிராமம். மீஞ்சூரில் இருந்து ஜெகநாதபுரம் செல்லும் சாலையில் இன்று காலை திடீரென பள்ளம் ஆழ் துளை போல் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதனை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சென்று பார்த்த போது ஆழ்துளை போல் நூறு அடிக்கு மேலாக பள்ளம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கிராமத்தினர் கூறுகையில் கடந்த 15  வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் ஆழ்துளை கிணறு இருந்ததாகவும், அதன் மேலாக போடப்பட்ட சாலை சரியாக மூடப்படாமல் போடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் பிறருக்கு பள்ளம் குறித்த எச்சரிக்கையை வெளிப்படுத்த அப்பள்ளத்தில் மரக்கிளையினை அதனுள் வைத்தனர்.

மேலும், குறிப்பாக இப்பகுதியில் குழந்தைகள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால் அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்கு முன்பாக ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here