தஞ்சாவூர், மே. 09 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

அடிக்கிற வெயிலில் நா வறண்டு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் ஒவ்வொருவருக்கும் பேருந்தில் ஏறி தர்பூசணி, நீர்மோர் வழங்கி தாகம் தீர்த்தார் தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி

தஞ்சை பழைய பேருந்து நிலையம், ஹவுசிங் யூனிட், புதிய பேருந்து நிலையம், கரந்தை, ரயிலடி என மக்கள் அதிகம் கூடும் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். இராமநாதன், துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி ஆகியோர் நகரின் ஒவ்வொரு பகுதிகளில் திறந்து வைத்தனர்.

தஞ்சை ஹவுசிங் யூனிட் பேருந்து நிறுத்தத்தில் நின்று சென்ற பேருந்துகளில் ஏறிய துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி பேருந்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளுக்கும் தர்பூசணி, நீர்மோர் வழங்கி தாகம் தீர்த்தார். துணை மேயரின் இந்த செயலை பயணிகள் அனைவரும் பாராட்டினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here