ஆவடி, மே. 21 –

சென்னை புறநகர் பகுதியான ஆவடியை அடுத்துள்ள வெள்ளானூர் பகுதியில் பிரசாத் என்பவர் துரித உணவகம், பங்க்கடை பழரச குளிர்பானக் கடை என மூன்று கடைகளை வைத்து நடத்தி வந்தார்.

இந்நிலையில் இன்று மதியம் திடீரென அக்கடையின் பின்புறம் தீ கொழுந்து விட்டு மள மளவென எரிய ஆரம்பித்தது. அதனை அப்பகுதியில் இருந்த திருவள்ளூர் மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் சதீஸ் விபத்துக் குறித்த தகவலை உடனடியாக ஆவடி தீயணைப்பு வீரர்களுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த ஆவடி தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தாமதமின்றி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்ததால் அங்கு பற்றி எரிந்துக் கொண்டிருந்த சமையல் சிலிண்டர்கள் வெடித்து பெரும் உயிர் சேத த்தை ஏற்படுத்தி இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு சிலிண்டர்களை அனைத்து அப்புறப்படுத்தினர். மேலும் இத் தீ விபத்தில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாகிவுள்ளதாக தகவல் தெரிய வருகிறது. முழுமையான பொருட் சேத மதிப்பு விசாரணைக்குப் பின்பே தெரிய வரும் என காவல் துறையினரின் விசாரணையில் கூறப்படுகிறது. இவ் விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here