இராசிபுரம், ஏப். 20 –

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி இராமலிங்கம் Ex-MP தலைமையில், மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தில் கீழ் பட்டணம் ரோட்டில் உள்ள அங்கன்வாடியில் பணிபுரியும் ஊழியர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும், அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உள்ள திண்பண்டங்கள் வழங்கப்பட்டது. இந்தநிகழ்சியை நகர பெறுப்பாளர் P. வேலு ஏற்பாடு செய்து இருந்தார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மகளிர் அணி மாவட்ட தலைவர் சத்யபானு, நகர மகளிர் அணி தலைவர் மகேஸ்வரி, மாவட்ட தொழிலாளர் பிரிவு செயலாளர் மணிகண்டன், மற்றும் நகர நிர்வாகிகள் குமார், காவியராஜன், மணிகண்டன், கேன்டீன் வெங்கடேஷ், தொகுதி ராஜா, வழக்கறிஞர் இளங்கோ, Vகுமார், ராம்குமார், பிரபாகர், கோகுல்ராஜ், விஜய், குமார், Er சதீஷ் சீனிவாசன், கண்ணன் தனபால், சூர்யா பாலமுருகன், மணிகண்டன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here