மீஞ்சூர், மே. 25 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், திராவிட மாடல் ஆட்சியின் ஈராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெகதீசன் தலைமையிலும், ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி, மு.பகலவன், மு.கதிரவன், வழக்கறிஞர் ரவிக்குமார்,பழவை அலவி, தன்சிங், ஸ்டாலின், முனுசாமி, குணாளன், குமார், பார்த்தசாரதி, அண்ணாதாஸ் உள்ளிட்டவர்கள் முன்னிலையிலும், காணியம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் டி.ஜே.கோவிந்தராஜன், தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
மேலும் இக்கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்தியவர்கள், தமிழகத்தில் நடைபெற்று வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி மிகச் சிறப்பானது எனவும், குறிப்பாக பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி சிறப்பான ஆட்சியாக இத்திராவிட மாடல் ஆட்சியை தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்று வருவதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பள்ளி குழந்தைகளின் நலனின் அக்கறை கொண்டு அவர்களது கல்விக்கான பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அப்போது அவர்கள் குறிப்பிட்டு உரை நாகழ்த்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு நல திட்ட உதவிகளும் இக்கூட்டத்தில் வழங்கினார்கள். வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற இக்கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக மற்றும் இளைஞரணி பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்,
இதில் பொன்னேரி தீபன்,பாளையம், உள்ளிட்ட திரளான கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர், கூட்டத்தில் முடிவில் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ஸ்ரீதர், எழிலரசன்,தேவராஜ், உள்ளிட்டவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.