வெள்ளவேடு, ஜூலை – 14,

நேற்று முன்தினம் சொக்கநல்லூர் பைபாஸ் ரோட்டில் உள்ள பழைய பஸ்களை உடைத்து பிரித்தெடுக்கும் கம்பெனி ஒன்றில்  திருச்சி மாவட்டம் எடமலை பட்டி புதூர், சொக்கலிங்கபுரத்தில் வசிக்கும் பழனிகுமார் என்பவரின் மகன் விமல் தனது தந்தை மற்றும் அவர்கள் ஊரை சேர்ந்த சிலருடன் வேலை செய்து வந்துள்ளனர். சம்பவத்தன்று வழக்கம் போல் வேலை செய்துவிட்டு இரவில் சாலையோரம் இருக்கும் தள்ளுவண்டிக் கடையில் சாப்பிட சென்ற போது, அடையாளம் தெரியாத அங்கிருந்த நபர் ஒருவர் இவர்களிடம் தகாத வார்த்தையில் பேசி, எந்த ஊர் என மிரட்டலாக கேட்டுள்ளார். பின்பு, அங்கிருந்து சென்ற நபர் 5 பேர்களாக திரும்பி வந்து தனது தந்தையை தகாத வார்த்தையால் திட்டியும் கத்தி மற்றும் கட்டையால் தாக்கினார்கள். அதில் எனது தந்தையின் மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவர் தற்போது, சென்னை அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக இருந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். எனது தந்தையை தாக்கிய கும்பல் தப்பிவோடி விட்டனர். எனவே தப்பி ஓடிய நபர்களை அடையாளம் கண்டு பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி அச்சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான பழனி குமார் என்பவரின் 18 வயதான மகன் விமல் வெள்ளவேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here