மணவாளன் நகர் ஜூலை – 14
வெங்கடேசன் , பிரவீன் என்ற குள்ள பிரவீன் இருவரும் நண்பர்கள் இவர்கள் மீது காவல் நிலையத்தில் ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளன. நேற்று இருவரும் சேர்ந்து மது அருந்திவுள்ளனர். அப்போது போதையில் இருவருக்கிடையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மணாளன் நகர் எம்.ஜி.ஆர். நகர் சரஸ்வதி தெருவில் வசிக்கும் சேகர் என்பவரின் மகனும் அதைப் பகுதியில் வசிக்கும் சண்முகம் என்பவரின் மகனுமான வெங்கடேசன் என்ற சொனட்டிகா என்பவரின் நண்பனுமான குள்ள பிரவீன் வழிமறித்து கத்தியால் குத்தி இதோடு ஒழிந்துப் போட என வயிற்றிலும் அவரின் இடது கையிலும் தாக்கிவுள்ளார். காயம் பட்ட வெங்கடேசை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து பின்பு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் படி அவரது நண்பரான பிரவீன் என்ற குள்ள பிரவீனை வ.க்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே குள்ள பிரவீன் தலைமறைவாகி உள்ளார் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.