20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றவர் ரோஜர் பெடரர். 20-ல் ஒருமுறை மட்டுமே பிரெஞ்ச் ஓபனை வென்றுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் டென்னிஸ் தொடர்கள் செம்மண் கோர்ட்டில் (Clay Court) நடைபெறும். புல்தரை கோர்ட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த ரோஜர் பெடரர், செம்மண்ணில் பெரிய அளவில் சாதித்தது கிடையாது.

போட்டி அட்டவணை அதிக அளவில் இருந்ததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாட்ரிட் ஓபனில் பங்கேற்கவில்லை. தற்போது பிரெஞ்ச் ஓபனை கருத்தில் கொண்டு மாட்ரிட் ஓபனில் விளையாட முடிவு செய்துள்ளார்.

இதை உறுதிப்படுத்தியுள்ள மாட்ரிட் ஓபன் தொடருக்கான இயக்குனர் ‘‘பெடரர் எல்லா காலங்களிலும் சிறந்த வீரர்களில் ஒருவர். இதில் எந்த ரகசியமும் இல்லை’’ என்றார். மாட்ரிட் ஓபன் மே 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடக்கிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here