சென்னை, ஜூன், 01 –

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் அறிவிப்புகளின் தற்போதைய நிலைக் குறித்தும் அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் துறைத்தலைவர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் துறை தலைவர்கள் இடையே ஆய்வுக்கூட்டத்தில் பேசும் போது.,

மாநிலத்தின் வளர்ச்சி என்பது புதிய தொழில்நுட்பங்களை எந்த அளவிற்கு நீங்கள் திட்ட செயலாக்கங்களிலும் கண்காணிப்புகளிலும் புகுத்தகிறீர்கள் என்பதில்தான் அமைந்திருக்கிறது அதன் வளர்ச்சி மேலும், ஆண்ணாண்டு காலமாக செய்து வருவதையே தொடர்ந்து செய்து வந்தால் புதிய மாற்றங்கள் , முன்னேற்றங்கள் ஏற்படாது என்பதை நாம் உணர்ந்திட வேண்டும் என்றார்.

தொடர்ந்து நாம் தற்போது இந்த அரசின் இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம் எனவே முதலாமண்டில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருந்தாலும், இன்னும் சில அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட வேண்டியுள்ளது. ஆணை வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் பல அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது பாரட்டத்தக்கது என்ற போதிலும், அதேச் சமயத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வரும் அறிவிப்புகளையும் நாம் துரிதமாக செயல்படுத்த வேண்டும்.

அதேப்போல் நடப்பு ஆண்டில் வெளியிட்டுள்ள அறிவிப்புகளில் அரசாணை வெளியிடப்பட வேண்டிய இனங்களின் மீதி உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து இந்த மாத இறுதிக்குள் தேவையான அரசாணைகளை வெளியிட வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசுகையில் குறிப்பிட்ட காலத்திற்குள் அரசாணை வெளியிடப்பட துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாணை வெளியீடு என்பது திட்டச்செயலாக்கத்தில் முதல் படி மட்டுமே என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். அதற்கான போதுமான நிதி ஒதுக்கீட்டுடன் அரசாணைகள் வெளியிடப்பட்ட பின்னர் துறைத்தலைவர் எவ்வித தாமதமும் இல்லாமல் அவற்றை நடைமுறைப்படுத்தி அத்திட்ட பயன்களை மக்களிடம் கொண்டு போய் சேர்த்திட வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம் என அறிவுறுத்தினார்.

அதிலும் மேன்மை களாய்வுகள் மேற் கொள்வதாகும், தேவையான இனங்களில் திட்ட செயலாக்கத்தின் போது, மக்களின் கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும். இவை ஒவ்வொன்றிலும் மாவட்ட ஆட்சியர்களை ஈடுபடச் செய்து அனைத்து திட்டங்களையும் நீங்கள் நிறைவேற்றிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்ணஃடார்.

பேருந்து நிலையத்திட்டங்கள், குடிநீர், சாலைத்திட்டங்கள் வீட்டு வசதி மற்றும் வேலை வாய்ப்புத்திட்டங்கள் போன்றவை எல்லாம் மக்கள் பெரிதும் எதிர் பார்க்க்கஃ கூடிய திட்டங்கள் ஆகும். அவற்றை நீங்கள் சிறப்பாக நிறைவேற்றிட வேண்டும் என்றார்.

அதேப்போல் அரசின் சேவைகளான பல்வேறு சான்றிதழ்கள், கட்ட ட அனுமதி பதிவுகள் மற்றும் உரிமங்கள் தடையின்மைச் சான்றிதழ்கள் போன்றவற்றை வழங்குவதில் கணிணூ தொழிற்நுட்ப வசதியினை பயன்படுத்தி அவை தாமதமின்றி வழங்கப்படுவதை துறைத்தலைவர்களாகிய நீங்கள் கள அளவில் ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும் அப்போதுதான் நாம் அரசு நிர்வாகத்தை செம்மைப்படுத்தி அரசு திட்டங்களை மக்களுக்கு முழுமையாக கொண்டு சென்றதாக கருத முடியும் என்றார்.

எனவே மிகப்பெரிய உட்கட்டமைப்பு திட்டமாக இருந்தாலும், எளிய ஒரு சேவைத்திட்டமாக இருந்தாலும் அனைவரும் ஒரே அர்ப்பணிப்பு உணர்வுடன் இது மக்களுக்கான திட்டம் இதனை மக்களுக்கு விரைவாக கொண்டு சேர்க்க வேண்டு ம் என் உயர்ந்த நோக்குடன் துறைச்சார்ந்த அமைச்சர்களுடனும் இணைந்து துறைத்தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்களை வழி நடத்தி திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என்று அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் துறைத்தலைவர்களிடம் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here