கும்பகோணம், செப். 28 –

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணி நடைப்பெற ஒருபோதும் அனுமதிக்க கூடாது. எனவும், சமுக நல்லிணக்கம் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது குறித்தும் விடுதலை சிறுத்தை கட்சி சட்டமன்ற தொகுதி சார்பில் அனைத்துக் கட்சியினரின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மேலும், காந்தி ஜெயந்தி அன்று ஆர் ஆர் எஸ் அமைப்பினர் தமிழகத்தில் பேரணி நடத்த உள்ளார்கள். சனாதன சக்திகளுக்கு இங்கு இடமில்லை. சங்பரிவார்களின் வன்முறைகளுக்கு இங்கே இடம் தரமாட்டோம், அவர்களின் சதிகளை, சதி திட்டங்களை முறியடிப்போம் என்று விரும்புகின்ற அனைவரும் பங்கேற்கக்கூடிய ஒரு அறப்போர்தான் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்” வரும் அக்டோபர் 2-ம் தேதி காந்தியடிகளின் பிறந்தநாள் அன்று மாலை 4 மணியளவில் நால்ரோடு பகுதியிலிருந்து தாராசுரம் வரை சுமார் 10,000 பேர் கலந்து கொள்ளும் மனித சங்கிலி போராட்டம் நடத்துவதுக் குறித்து அனைத்து கட்சி அவசர ஆலோசனை கூட்டம் தனியார் மண்டபத்தில் சட்டமன்ற தொகுதி செயலாளர் முல்லை வளவன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி மண்டல செயலாளர் விவேகானந்தன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் தமிழனி, மாவட்ட செயலாளர் உறவுழகன், மாநிலத் துணைச் செயலாளர் அரசாங்கம், ஒன்றிய செயலாளர்கள் சசிகுமார், விடுதலைச் செல்வன், விவசாய அணி மாநில துணைச் செயலாளர் நாகப்பன், அண்ணல் அம்பேத்கர் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில செயலாளர் அண்ணாதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மனோகரன், திராவிட கழக மாவட்ட செயலாளர் நிம்மதி, நீல புலிகள் இயக்கம் தலைவர் இளங்கோவன், இந்திய தேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுபா, ஐ என் டி ஜே மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லாஹ், முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவர் ரஹமத் அலி, சிபிஐ எம் எல் மாவட்ட தலைவர் கண்ணயைன், ம.க.க மாவட்டத் தலைவர் குழந்தை ஜாபர் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என ஏராளமானவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here