பொன்னேரி, டிச. 12 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக பலத்தை சேதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் பெரும்பான்மையான மக்கள் வெள்ளத்தில் இருந்து மீளாத நிலையில், தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்குவதற்காக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனை அறிந்து கடந்த ஓராண்டு மற்றும் ஆறு மாதங்களுக்கு முன் குடும்ப அட்டை விண்ணப்பித்தவர்கள் குடும்ப அட்டையில் திருத்தம் செய்வதற்காக விண்ணப்பித்தவர்கள் உள்ளிட்ட சுமார் 1000 பேருக்கு மேல் வட்ட வழங்கல் துறை அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளனர்.

ஆனால் இதுவரையில் பல பேருக்கு குடும்ப அட்டை வழங்கவில்லை எனவும், குடும்ப அட்டை ஆன்லைன் பதிவு வெளிவந்தும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவில்லை எனவும் முழுமையான குடும்ப அட்டதாரர்களுக்கு நிவாரணத் தொகை 6 ஆயிரம் வழங்கப்படும் எனவும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படாது என வட்ட வழங்கல் அலுவலர்கள் கூறியதாகவும் அதனால் பொன்னேரி வருவாய் கோட்ட அலுவலகத்தில் குடும்ப அட்டை விண்ணப்பித்தவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 6000 ரூபாய் பெறுவதற்கு தங்களுக்கு உத்தரவிட வேண்டும் என கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இதனால் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here