கும்பகோணம், ஏப். 15 –

கும்பகோணம் அருகேவுள்ள பந்தநல்லூரில் பயிற்சி காவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இத்தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் செட்டிகுளத்தெருவை சேர்ந்தவர் முருகன் என்பவரின் மகன் பரத்குமார் (22). இவர் நடந்து முடிந்த காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த மார்ச் 13ம் தேதி முதல் தொடங்கிய திருச்சி காவலர் பயிற்சியில் ஒரு மாத காலமாக பயிற்சி பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் தமிழ்ப்புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை பயிற்சி காவலர் பரத்குமார் வீட்டுக்கு அருகில் உள்ள அவரது வாடகை பாத்திர குடோனில் மர்மமான முறையில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனை அறிந்த குடும்பத்தினர் பந்தநல்லூர் காவல் நிலையத்தில் தகவல் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் உடலை மீட்டு திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பந்தநல்லூர் காவல் துறையினர் பரத்குமாரின் இந்த திடீர் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறுக் கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here