மீஞ்சூர், ஆக. 14

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த வஞ்சிவாக்கம் கிராமத்தில் கற்கை நன்று கிராம கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச இரவு பாடசாலை திறப்பு விழா நடைபெற்றது.

சென்னை அகர் துளிர் அறக்கட்டளை வழங்கிய இந்த கட்டிடத்தினை கோவை ராமகிருஷ்ண மடம் சுவாமி பக்தி காமாணந்தா மகராஜ் திறந்து வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக ஆதி தமிழர் விடுதலை இயக்கம் இளஞ்செழியன், வஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ஸ்ரீ ராஜேஷ்,ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மணிவண்ணன், மெதூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அமிர்தராஜ், கும்மிடிப்பூண்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சுரேஷ், மேலூர் புதிய தலைமுறை அக்னி சிறகுகள் கோபாலகிருஷ்ணன், உப்பளம் அம்பேத்கர் கல்வி நிலையம் இளங்கோவன், பாரதி நகர் சமூக ஆர்வலர் சுரேஷ்,மூத்த பத்திரிகையாளர் ஜானகிராஜன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியினை வஞ்சிவாக்கம் கற்க நன்று கிராம கல்வி அறக்கட்டளை தலைவர் வடிவேல்,நிர்வாகிகள் கார்த்திக்,நவீன் குமார்,அருண்குமார்,கிஷோர் குமார் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here