கும்மிடிப்பூண்டி, ஜன. 09 –
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்துள்ள குமாரநாயக்கன் பேட்டை வெக்காளியம்மன் கோவிலில் நேற்று திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்குமார் தலைமையில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நடைபெற்றது.
மேலும் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில செயலாளர் வினோஜ் P செல்வம் கலந்து கொண்டார். இவ்விழாவல் ஒரே இடத்தில் 300 க்கும் மேற்பட்டவர்கள் பொங்கல் வைக்கும் நிகழ்வை அப்போது அவர் துவக்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.
மேலும் இவ்விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், பரதநாட்டியம், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகளை நிகழ்த்தி, இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் அசத்தினார்கள். மேலும் இந்நிகழ்வின் போது பாமக, திமுக, விசிக, உள்ளிட்ட பல்வேறு கட்சியை சார்ந்த பலர் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்..
தொடர்ந்து இந்நிகழ்வில் சிறப்புரை நிகழ்த்திய பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், அடைந்தால் திராவிட நாடு இல்லையென்றால் சுடுகாடு என கூறியவர்கள் எல்லாம் தமிழ்நாட்டைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் எனவும், தமிழகம் என்றாலும் தமிழ்நாடு, என்றாலும் எல்லாம் ஒன்றுதான் எனவும், மேலும் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை காக்கின்ற கட்சியாக பாஜக விளங்குகிறது எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.
இதில் பாஜக முன்னால் மாவட்டத் துணைத் தலைவர் முத்துராஜ், அரசு தொடர்பு துறை மாநில தலைவர் பாஸ்கரன், கே.ஆர்.வெங்கடேசன், சிவராஜ்குமார், அன்பாலயா சிவக்குமார், ஆர்.சரவணன் ,ஜி. சரவணன், வேதாச்சலம், ஜம்புலிங்கம், நடராஜன், வெக்காளி சுதாகர், பிரவீன், நரேஷ்குமார், பொன்பாஸ்கர், நந்தன், கோட்டீஸ்வரன், சீனிவாசன், உள்ளிட்ட ஒன்றிய, நகர, மாவட்ட,நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.