கும்பகோணம், ஜூன். 05 –

கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் அன்பழகன் வயது 58 இவர் பர்னிச்சர் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவியும் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் மகன் பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் என இருவர் உள்ளனர்.

இந் நிலையில் அன்பழகனுக்கும் ராணிக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினைக் காரணமாக அடிக்கடி சண்டை நடைப்பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு ராணி வயது 38 அவரது தாயார் மீனாட்சி வயது 65 இருவரும் மொட்டை மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதுக் குறித்து தகவலறிந்த திருவடைமருதூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெற்றிவேந்தன் ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் இருவரது உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயும் மகளும் ஒரே நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்திவுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here