மீஞ்சூர், ஜன. 06 –

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த திருவெள்ளைவாயல் கிராமத்தில் 13 வருட காலமாக நடைபெற்று வரும் வருடாந்திர மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மனுக்கு வேண்டுதல் வழிபாடு நடத்துவது வழக்கம் .

அதன் தொடர்ச்சியாக அக்கிராமத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் 40 நாள் காப்பு கட்டி விரதம் இருந்து ஆதிபராசக்தி அம்மனுக்கு வேண்டுதல் காணிக்கைகளை செலுத்த இன்று மேலு மருவத்தூர் ஆதி பராசக்தி திருக்கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும், முத்துமாரியம்மன் திருக்கோவிலின் அறங்காவலரும் பூசாரியமான வேலாயுதம் தலைமையேற்று நடத்தினார்.

இந்நிகழ்வில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை செய்தனர். அதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இடி முடியினை சுமந்தபடி தங்களின் நேர்த்திக் கடனை செலுத்துவதற்கு வாகனத்தின் மூலம் புறப்பட்டனர்.

விஜயா பாஸ்கரன் அனைவரையும் வழி நடத்தி அழைத்துச் சென்றார். மேலும் இந்நிகழ்ச்சியில் திரளான கிராம பொதுமக்கள் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து வந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here