தஞ்சாவூர், மே. 01 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் எல்ஐசி லிகாய் ஆயுள் காப்பீட்டு முகவர்கள் சங்கம் சார்பில் தஞ்சை எல்ஐசி கோட்ட அலுவலகம் முன்பு உழைப்பாளர் தினமான மே 1 ஆம் தேதியன்று கொண்டாடும் வகையில் ஆயுள் காப்பீட்டு முகவர்கள், சங்க கொடி ஏற்றி சக முகவர்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினார்கள்.

அதனைத் தொடர்ந்து முகவர்களுக்கு பென்ஷன் வழங்க வேண்டும், சேம நல நிதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து முகவர்களுக்கும் மெடி கிளைம் வழங்க வேண்டும். குழுக்காப்பீட்டு வரம்பையும், வயது வரம்பையும் அதிகப்படுத்த வேண்டும், நேரடி மற்றும் ஆன்லைன் வணிகத்தை எல்ஐசி நிர்வாகம் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்,

இந்நிகழ்ச்சியில் லிகாய் மாநிலச் செயலாளர் ராஜா. நிர்வாகிகள் ராஜேந்திரன், பத்மாவதி, புகழேந்தி உள்ளிட்ட  எல்ஐசி முகவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here