கும்பகோணம், அக். 4 –

 

கும்பகோணத்தில் இன்று உபியில் லக்கிம்பூரில் கேரி என்ற இடத்தில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் மீது கார் மோதி கொல்லப்பட்டதைக் கண்டித்து அனைத்துக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. 

கும்பகோணத்தில் உபியில் லக்கிம்பூரில் கேரி என்ற இடத்தில் பாஜக மத்திய மாநில அமைச்சர்களுக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா  வந்த கார் மோதி விவசாயிகள் கொல்லப்பட்ட இச்சம்பவத்தால் நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதைப் போன்று கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் துணைச் செயலாளர் சின்னை பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் டிஆர் லோகநாதன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாரதி நகர செயலாளர் மதியழகன் நிலப்புலிகள் இயக்கம் தலைவர் இளங்கோவன் விடுதலை சிறுத்தை கட்சி மண்டல செயலாளர் விவேகானந்தன் மதிமுக நகர செயலாளர் செந்தில் முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் ரகமத் அலி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here