கும்பகோணம், மே. 23 –

கும்பகோணம் அருகேவுள்ள முத்துபிள்ளை மண்டபம் பகுதியில் நண்பனின் மனைவியை கிண்டல் செய்த வாலிபரை  அருவாளால் வெட்டிய இளைஞனின் செயல் அப்பகுதியில் ஏற்படுத்தியது.

கும்பகோணம் அருகில் நாச்சியார்கோவில் காவல் சரகம் முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியைச் சேர்ந்த வெல்டிங் பட்டறையில் கூலி வேலை செய்து வரும் விஜய் (22) என்பவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் இவரது மனைவியை அதே பகுதியை சேர்ந்த அஜித் (22) என்பவர் தொடர்ந்து கிண்டல் செய்து வந்துள்ளார். இதுக்குறித்து தனது கணவர் விஜயிடம் தெரிவித்துள்ளார். இப்பிரச்சினை தொடர்பாக நேற்று விஜய் மற்றும் அவரது நண்பர் திவாகருடன் சேர்ந்து அஜித்தை தட்டிக் கேட்க சென்ற போது வாய் தகராறு முற்றி கைகலப்பாகிய நிலையில் திடிரென திவாகர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், அஜித்தின் நடுதலையில் வெட்டியுள்ளார்.  இதனை தடுக்க வந்த அஜித்  தந்தை ராஜகோபாலனின் (48) இடதுகை மணிக்கட்டுடன் துண்டானது.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடி தலைமறைவான விஜய் மட்டும் திவாகரை  தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருமணமான பெண்ணை கிண்டல் செய்து தகராறு முற்றி, இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில் ஒருவருக்கு மணி கட்டுடன் கை துண்டான சம்பவம் நேற்றிரவு கும்பகோணத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here