காஞ்சிபுரம், டிச. 26 –
காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ், வன்னியர்க்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு குறித்து உயர்நீதிமன்றத்தில் தவறான தீர்ப்பு வழங்கியதால் உச்ச நீதிமறத்தை நாடியுள்ளோம் விரைவில் நல்ல தீர்ப்பு வரும் காத்திருப்போம் என பேசினார். மேலும் பாட்டாளி மக்கள் கட்சி மாறி மாறி கூட்டணி வைத்ததின் காரணத்தில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணியை முதல்வராக்க வேண்டும், உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும், நகர்புர தேர்தலாக இருந்தாலும், எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என பேசினார்.
இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.மூரத்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.