காஞ்சிபுரம், ஜூலை. 31 –

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் வினோத் கண்ணா என்ற 18 வயது மாணவர். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். இவர் தினமும் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் ஒரகடம் வந்து பின்னர் அங்கிருந்து கல்லூரி பேரூந்தில் செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று இவர் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து ஒரகடம் நோக்கி பண்ருட்டி அருகே உள்ள வாலாஜாபாத் வண்டலூர் சாலையில் கல்லூரி செல்வதற்காக வந்து கொண்டிருந்த போது, இவருக்கு பின்னால் வந்த டிராக்டர் மோதியதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவல் அறிந்து விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் காவல் நிலைய போலீசார், வினோத் கண்ணா சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவ்விபத்துக் குறித்து வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் மற்றும் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவன் மரணம் அப்பகுதியில் உள்ளவர்களிடம் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here