மதுரவாயல், ஏப். 07 –
மதுரவாயல், தனலட்சுமி நகர் பகுதியில் பாலசுப்ரமணி (84), இவரது மனைவி தனலட்சுமி (70), இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவ நாளான இன்று அதிகாலையில் தனலட்சுமி சுடு தண்ணீர் வைப்பதற்கா கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது திடீரென தீப்பிடித்து அறை முழுவதும் பரவ ஆரம்பித்தது.
இவ்விபத்தால் கணவன் மனைவி இருவரது உடல்களிலும் தீ பற்றிவுள்ளது இதனால் அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து இருவர் மீதும் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த சமையல் சிலிண்டர் அனைத்து வெளியே கொண்டு வந்தனர். மேலும் தீக்காயமடைந்த இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கியாஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதென தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் தொடர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்