கும்பகோணம், ஜன. 27 –

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளப்புலியூர் ஊராட்சியில் கொண்டாங்குடி, மணஞ்சேரி, கள்ளப்புலியூர் பகுதிகளில் 900 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளப்புலியூர் ஊராட்சிமன்ற அலுவலகத்தின் அருகே உள்ள சிறிய இடத்தில் மிகவும் பழமையான நிலையில் பகுதிநேர கிராம அங்காடி இயங்கி வருகிறது. மேலும் இடம் பற்றாக்குறை அங்காடி சேமிப்பு அறை போன்ற அத்தியவாசிய தேவைகளின் அதிகரிப்பால் கிராமபுற மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் முருகனை  சந்தித்து புதிய அங்காடி ஒன்றை கட்டித் தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவித்த கிராம மக்கள் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. மேலும் கிராமபுற அங்காடியில்  குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, போன்ற அத்தியவாசிய பொருட்கள் சேமித்து வைப்பதற்க்கும், உரிய பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. இந்நிலையில் கிராம மக்களுக்கு தமிழக அரசு வினியோகம் செய்து வருவதை உணர்ந்து கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் தனது சொந்த நிதியிலிருந்து

ரூ.15 லட்சம் மதிப்பீட்டில்  280 பயனாளிகள் பயன் பெறும் வகையில் பகுதி நேர கிராம அங்காடி கட்டிடத்தை ஊராட்சி மன்ற தலைவர் முருகன் கிராம மக்கள் முன்னிலையில் இன்று திறந்து வைத்து அர்பணித்தார். இதனையடுத்து கள்ளப்புலியூர் கிராம மக்கள் புதிய கிராம அங்காடி கட்டிடத்தை ஊராட்சி  மன்ற தலைவர் கே.முருகன் முன்னிலையில் பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். விழாவில் அனைத்து கட்சி பிரமுகர்கள், மகளிர்குழுவினர், பொதுமக்கள், அங்காடி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here