திருவாரூர், நவ. 26 –

திருவாரூரில் தென்னக ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து வரும் 28ஆம் தேதி முதல் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடைப்பெற உள்ளதால், பயணிகள் தங்களுடைய பயணத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலவாணன் ஆகியார் இணைந்து பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருவாரூரில் நடைபெற்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் நாகை எம்பி செல்வராஜ் மற்றும் திருவாரூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கீழ தஞ்சை எனப்படும் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், வேதாரணியம் பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த பல ரயில்களின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து பல முறை மத்திய ரயில்வே துறைக்கு தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை, எனவும், அதனைத்தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை கண்டிக்கும் வகையில், வரும் 28ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் மூன்று இடங்கள் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு இடம் என 4 இடங்களில் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் நடைப்பெற்ற அனைத்துக் கட்சியினர் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் இரண்டாவது ஆயத்த கூட்டம் திருவாரூரில் இன்று ( நவ 26 ) திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சி, காங்கிரஸ் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் திருவாரூர் மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் இணைந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.  அப்போது அவர்கள் கூட்டாக,  தொடர்ந்து தெற்கு ரயில்வே திருவாரூர் நாகை மாவட்டங்களை புறக்கணித்து வருவதை கண்டித்து 28ஆம் தேதி மிகப்பெரிய அளவில் அனைத்துக் கட்சி விவசாய அமைப்புகள் வர்த்தக சங்கங்கள் ரயில் உபயோகிப்பாளர்கள் அமைப்பினர் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து ரயில் மறியல் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

என்றும், இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் எதுவும் பேசாத நிலையில் இன்று திருச்சி தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் வரும் இரண்டாம் தேதி இந்த கோரிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்துவதாக கோரிக்கை விடுத்துள்ளார்.

அதனை நாங்கள் நிராகரித்து விட்டோம் என தெரிவித்தார்கள். மேலும்,  எங்களின் மூன்றாவது கோரிக்கையாக உள்ள மன்னார்குடி – கோவை செம்மொழி ரயில் சேவையை திருவாரூரில் இருந்து புறப்படும் வகையில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு மன்னார்குடியில் உள்ள சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதற்கு,

திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் பதிலளிக்கையில் மன்னார்குடி கோவை இடையே இயக்கப்படும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை மன்னார்குடியில் இருந்து புறப்பட்ட திருவாரூர் வந்து பின்னர் கொரடாச்சேரி பகுதி பயணிகள் பயண்படும் வகையிலும் நீடாமங்கலத்திலேயே ரயிலை நிறுத்தி என்ஜின் மாற்றுவதால் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.

ஆகவே திருவாரூர் வரை செம்மொழி விரைவு ரயில் சேவை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.

மேலும் தொன்மையான ரயில் சேவைகளான நாகூர் ஆண்டவர் விரைவு ரயில், போட் மெயில் விரைவு ரயில், கம்பன் விரைவு ரயில் போன்ற பழமையான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. அதனையையும் வலியுறுத்தியே நாங்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். எனவும்,

தற்போது பல்வேறு வழித்தடத்தில் புதிய ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் மிகப் பழமையான ரயில் சேவைகளை மத்திய அரசு நிறுத்த வேண்டிய அவசியம் என்ன என்று அவர் அப்போது கேள்வியெழுப்பினார்.

மேலும் இந்தத் தொடர் ரயில் மறியல் போராட்டம் காரணமாக இப் பகுதிக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பயணம் செய்யும் பயணிகள் தங்கள் பயணத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள் நலன் வேண்டி பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி , சிபிஐ மாவட்ட செயலாளர்  செல்வராஜ், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் வடிவழகன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

பேட்டி நாகை எம்பி செல்வராஜ், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி. கலைவாணன்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here