மயிலாடுதுறை, மே. 24 –

தம்பட்டம் செய்திபகளுக்காக சந்திரசேகர்…

பெண் பிள்ளைகள் கல்வி மற்றும் தனித் திறன்கள் உள்ளிட்டவைகளில் முன்னேறி வருகின்றனர். ஆண் பிள்ளைகளுக்குதான் அறிவுரை கூற வேண்டிய நேரமாக உள்ளது, இருப்பினும் எந்தக் குழந்தையையும் குறைத்து மதிப்பிட வேண்டாம் எல்லோருக்கும் ஏதாவது ஒரு தனித் திறமை இருக்கும் என மாவட்ட மாதிரி பள்ளியில் மானவர் சேர்க்கை அறிமுக நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உரைநிகழ்த்தினார்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்துள்ள சோழம்பேட்டையில் மாவட்ட மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில் மானவர் அறிமுக சேர்க்கை நடைபெற்றது. இதையொட்டி முதன்மை கல்வி அதிகாரி அம்பிகாபதி ,தலைமை வகித்தார் விழாவில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேசும்போது. இந்த மாவட்ட மாதிரி பள்ளியில் சேர்ந்துள்ள. மானவ , மாணவிகளுக்கு, கல்வியோடு, ஆங்கில பேச்சு திறன், Neet, JEE விளையாட்டு, போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மதிப்பென் குறைவு என திட்டாதீரகள் மற்றவர்களோடு ஒப்பிட்டு பேச கூடாது. எனவும் எல்லா குழந்தைகளுக்கும் ஏதாவது ஒருவிதமான திறமை இருக்கும் என்றும், மாணவிகள் தற்போது எல்லா துறையிலும் முன்னேறி வருகின்றனர். நாம் கூறக்கூடிய அறிவுரைகள் ஆண் குழந்தைகளுக்குதான் என்றார்.

பின்பு, 10th, 11th,ல் கடந்த ஆண்டு அதிக மதிப்பென் பெற்ற மானவ மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும். இந்த மாவட்ட மாதிரி பள்ளியில் இந்தாண்டுக்கான மானவ மாணவி சேர்க்கையும் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் வில்லவன் கோதை நன்றியுரை ஆற்றினார் நிகழ்ச்சியில் ஏராளமான மானவ மாணவிகளும், பெற்றோர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here