தஞ்சாவூர், ஏப். 15 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகேவுள்ள கோனூர் புதுத் தேர்வை சேர்ந்தவர் கார்த்திக் (33). அவரது மனைவி சீதாதேவி. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளது. மூன்றாவது முறையாக கர்ப்பமான சீதாதேவிக்கு கடந்த வியாழக்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டு வீட்டிலேயே நீர் குடம் உடைந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து தஞ்சை இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்து உள்ளனர். இந்நிலையில் அதிகாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் குழந்தைக்கு மூச்சு தினறல் இருப்பதால் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், இதனிடையே மூன்று நாட்களாக குழந்தையை பெற்றோருக்கு காட்டவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மதியம் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதுக்குறித்து உறவினர்கள் கூறுகையில், கடந்த மூன்று நாட்களாக குழந்தையை கண்ணில் காட்டவில்லை என்றும், முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனவும் புகார் தெரிவித்தனர். மேலும் குழந்தை எப்படி இறந்தது என கேட்டதற்கு குழந்தையின் தலையில் ரத்தம் உறைந்ததாகவும், காயம் இருந்ததால் ரத்தம் உறைந்து போனதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக அவர்கள் கூறுகின்றனர்.

மேலும் பிறந்த குழந்தைக்கு தலையில் எவ்வாறு காயம் ஏற்பட்டது அவர்களே குழந்தையை கீழே போட்டுவிட்டு காயம் ஏற்பட்டதா என்று தெரியவில்லை, எனவே அதுக்குறித்து உரிய விசாரணை செய்து குழந்தை இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் பெற்றோர்களின் போராட்டம் குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த தஞ்சை மேற்கு காவல் துறையினர் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கார்த்தி உயிரிழந்த குழந்தையின் தந்தை.மஞ்சுளா உறவினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here