காஞ்சிபுரம், ஜூன். 16

காஞ்சிபுரம் அருகே 17 ஆண்டுகளுக்கு பிறகு அதே திமுக எம்.எல்.ஏ அதே தொகுதியில் மீண்டும் புதிய சாலை அமைக்க அடிக்கல் நாட்டல் விழா நேற்று நடைப்பெற்றது. திமுக எம்.எல்.ஏ வுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் அருகே முத்தையால் பேட்டை பகுதியில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்ட் சாலை தற்போது சேதமமைந்து இந்த சாலையை மீண்டும் அமைக்க பொதுமக்கள் தொகுதி சட்டமன்ற உனுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து 9.5 லட்சம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நேற்று முத்தையால்பேட்டை பகுதியில் துவங்கப்பட்டது.

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் க.சுந்தர் பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார். மேலும், 17 ஆண்டுகளுக்கு முன்பு 2005 ஆம் ஆண்டு உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியின் திமுக உறுப்பினராக இருந்த க.சுந்தர்  போது சிமெண்ட் சாலை போடப்பட்டது. 17 ஆண்டுகளுக்கு பிறகு  மீண்டும் அதே எம்.எல்.ஏ மீண்டும் அதே சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர்க்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here