திருவாரூர், டிச. 02

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கிடையே நடைப்பெற்று வரும் கலை விழாவின் பகுதியாக.. நன்னிலம் ஒன்றிய அரசு பள்ளிகளுக்கு இடையே கலை விழா போட்டிகள் நடைபெற்றது.

நன்னிலம் ஒன்றிய பகுதிகளில் அரசு பள்ளிகளுக்கிடையே நடுநிலைப்பள்ளி அளவில் 16 பள்ளிகளும், உயர்நிலை பள்ளி அளவில் 7 பள்ளிகளும், மேல்நிலைப்பள்ளி அளவில் 11 பள்ளிகளும் இக் கலை திருவிழா  போட்டிகளில் கலந்து கொண்டது..

கவின்கலை, இசை, வாய்ப்பாட்டு, வாத்திய கருவி இசைப்பது, மொழித்திறன், கட்டுரை, பேச்சுப்போட்டி, நாட்டியம், நாடகம் மற்றும் இசை சங்கமம் உள்ளிட்ட பலதரப்பட்ட பிரிவுகளில்  போட்டிகள் நடத்தப்பட்டது.

ஒன்றிய அளவில் முதலாம் மற்றும் இரண்டாம் இடம் பெறும் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து.. மாவட்டம் மற்றும் மாநில அளவில் போட்டிகளில்  பங்கு பெறுவார்கள்.

கடந்த 30. 11. 2022 முதல் 5. 12 .22 வரை கலை விழா போட்டிகள்  நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர் மாதவன் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தமிழ் செல்வன்,  நன்னிலம் வருவாய் ஆய்வாளர் நடேஷ்துரை மேலும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here