கும்மிடிப்பூண்டி, ஆக. 29 –

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் மருத்துவதுறையில் சிறப்பாக பணியாற்றி வருபவர் டாக்டர். கோவிந்தராஜ் ஆவார். மேலும் அவர் குறிப்பாக கொரோனா தொற்று பரவிய நெருக்கடியான கால கட்டத்தில் தனது உயிரையும் துச்சமாக கருதி, மிகவும் துணிச்சலாக தொற்று நோய் பரவாமலிருக்க அப்பகுதி மக்களுக்கு சிறப்பான மருத்துவச் சேவையாற்றி உள்ளார். அதனால் அப்பகுதி மக்களிடையே பெரு மதிப்பைப் பெற்று அவர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவரின் சிறப்பான மருத்துவச் சேவையை கண்டறிந்த லயன்ஸ் கிளப் அவருக்கு உலக மருத்துவ தினத்தை முன்னிட்டு பாராட்டு விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தனர். மேலும் நடைப்பெற்ற அவ்விழாவில், மருத்துவர் கோவிந்தராஜூக்கு, லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தியும், விருது வழங்கியும், பாராட்டு சான்றிதழ் வழங்கி அவரைப் பெருமைப் படுத்தினார்கள். அதுப் போன்று சிறப்பாக பணியாற்றிய மற்றொரு மருத்துவரான சுதர்சன் என்பவருக்கும் விருதுகளும் பாராட்டு சான்றிதழ்களும் அவ்விழாவில் லயன்ஸ் கிளப் சார்பில் வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here