ஆவடி, ஏப். 18 –
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்துள்ள பட்டாபிராம் நெமிலிச்சேரி பகுதியில் டாக்டர் பாபா சகோ அம்பேத்கர் அவர்களின் 131 பிறந்தநாள் விழா முன்னிட்டு டாக்டர் அம்பேத்கார் சங்கத்தின் சார்பாக ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி புதிதாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் மார்பளவு திருவுருவச் சிலை பொருந்திய மணிமண்டபம் புதிதாக கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் அனைவரும் டாக்டர் அம்பேத்கார் அவர்களின் புதிதாக நிறுவப்பட்ட திருவுருவ சிலைக்கு ஆளுயர மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, கேக் வெட்டி அப்பகுதியில் உள்ள அனவருக்கும் பகிர்ந்தளித்து விழாவினை கொண்டாடி சிறப்பித்தனர்.