பொன்னேரி, ஆக. 06 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள ஆண்டார்குப்பம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில், இன்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் சிறுணியம் பி.பலராமன் தலைமையில் நடைபெற்றது.

மேலும், இக்கூட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் விஜயகுமார், பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் ராஜா, மீஞ்சூர் ஒன்றிய கழக செயலாளர் முத்துக்குமார், சோழவரம் ஒன்றிய கழக செயலாளர் பிரகாஷ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் பி.டி.பானு பிரசாத், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

எதிர் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடக்கவிருக்கும் அக்கட்சியின் மாபெரும் மாநாட்டினை சிறப்படையச் செய்யும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை மாவட்ட அளவில் செய்திட வேண்டும்.

ஒன்றரைக் கோடி தொண்டர்களை கொண்ட கட்சியின் மாநாட்டிற்கு அம்மாவட்டத்தில் இருந்து திரளான தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.

கட்சியின் பொதுச்செயலாளர் எடப்படி கே. பழனிச்சாமியின் கரத்தினை வலுப்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பொருள் குறித்து அவ் ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட்டு அதன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்ற அம்மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் மிக உற்சாகத்துடனும், மிகுந்த ஆர்வத்துடனும் மதுரையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைப்பெறவுள்ள மாநாட்டை வெற்றி கரமாக நடத்திட வேண்டும் என்ற உற்சாகப் பெருக்கில் இருந்ததை நம்மால் காண முடிந்தது.

இதில் மீஞ்சூர் பட்டாபிராமன், வழக்கறிஞர் மாரி, தமிழரசன், பொன்னேரி செல்வகுமார், உள்ளிட்ட திரளான கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here