பெரியபாளையம், மே. 16 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மாளந்தூர் கிராமத்தை சேர்ந்த ஜெயசூர்யா (16) ஊத்துக்கோட்டை தனியார் பள்ளியில் +1படித்து வந்தார்.

இந்நிலையில்  +1 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஜெயசூர்யா அதில் தேர்ச்சி பெற்றுள்ளார்.இருப்பினும் அவர் அத்தேர்வில் குறைந்த அளவில் மதிப்பெண்னை ஜெயசூர்யா எடுத்திருந்ததால், அவரின் தந்தை மகனை கடிந்துள்ளார்.

அதனால் விரக்தியடைந்த ஜெயசூர்யா நள்ளிரவில் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். வாயில் நுரை தள்ளியபடி அலறி துடித்த மகனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அச்சம்பவம் குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

+1தேர்வில் மதிப்பெண் குறைந்ததை  தந்தை கண்டித்ததால் மாணவன்  விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட அச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here