காஞ்சிபுரம், ஜன. 28 –
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்துறையினர் 50-க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை நேரில் சந்தித்து மனு வழங்கினார்கள்.
அம் மனுவில் 2012 ஆம் ஆண்டு வருவாய் உதவியாளராக நேரடி நியமனம் மூலம் பணியில் சேர்ந்தோம், 2012 முதல் 2017 வரையில் அனைத்து விதப்பயிற்சிகளையும் முடித்து உள்ள நிலையில் 2018 ஆண்டு முதல் நிரந்த துணை வட்டாச்சியர் பட்டியல் வெளியிடாமல் இருந்து வருகின்றனர். காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்டோரை நிரந்தர துணை வட்டாச்சியர்களாக பட்டியலில் சேர்க்க கோரி பல முறை ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தும் இன்னும் சேர்த்து பட்டியலை வெளியிடவில்லை எனவும், மேலும் காவல்துறை பயிற்ச்சிக்கு அனுப்பி வைக்க கோரியும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக்கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி இரண்டு நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளார். எனத்தெரிய வருகிறது. இரண்டு நாட்களில் ஆட்சியர் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் இல்லை என்றால் தங்கள் தேர்தல் பணிகளை முடித்துவிட்டு மாலை 6 மணிக்கு மேல் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த இருப்பதாக வருவாய்துறையினர் தெரிவித்தனர்.



















